Monday, 11 February 2013

தொட்டபின்னும் தொடுவானம்

நெஞ்சுக்குள்ளே மின்னலடி
உன்னை எண்ணி மனப் பின்னலடி
வருணம் இல்லா என்னமடி
என்ன செஞ்சோம் குத்தம் அடீ !

கண்ணிலே கொண்டாடும் மனம் பித்தாடும்
உன்னை சென்றாடும் தென்றலின் பாதியடி
ஒளி பாயும் வேகமடி சராசரி தூரமடி
என் உள்ளெண்ணம் போகுமடி.

தொட்டபின்னும் தொடுவானம்
எட்டி எட்டி போகுமடி
நீல வானம் தூரமடி
கை நீட்டி எட்டி பிடி
உன் கிட்ட வந்து சேருமடி.

செவ்வானம சேலை கட்டி
உன்னுருவில் என்னருகே வந்ததடி
சில்லென்ற நீருண்டு உந்தன் குரலில்
சில்லென்ற ஒலி கேட்டேனடி

No comments:

Post a Comment