Sunday 24 February 2013

ஏதோ சில காலம் என்னுள்ளே...

நித்திரை என்றால் கனவுகள் கொட்டும்
கவிதை என்றால் உன்னை மீட்டும்
என் மனம் புரியாதோ ?
அன்பே அன்பே என் மனம் புரியாதோ !

ஏதோ உன்னை கண்டாலே என் மனதுள்ளே
சிறு பூக்கள் பூக்கிறதே
அன்பே நீ வந்த வழி எதுவென்று கூறாயோ ?
நீ வந்ததும் என் மௌனம் உடனே கலைந்தது
அன்பே அன்பே உயிர் வரை உள்ளே வா
சில காலம் நானில்லை நானாக

நீ என்றால் பூக்கள் மகிழும்
நீ என்றால் பறவைகள் சிரிக்கும்
என் மனம் புரியாதோ ?
நீ என்றால் எனக்கு ஆதி அந்தம்
பூமிக்கு வானம் போல
என்னுடன் நடப்பாயோ ?

ஏதோ சில காலம் என்னுள்ளே
கவிதைகள் தைத்தாயோ ?
காலம் உன் கைகளில் சிரிக்கிறதே
எனைப் பாத்துதான்
அழகே உனைக் கண்டு
அதிரும் நில நடுக்கம் கூட அமைதியாகிறதே
கனவு என்று மறுத்தும்
கவிதை எழுதும் நாள் குறித்தேன்.

No comments:

Post a Comment