Friday, 8 February 2013

வண்ணப்பூக்கள் வெள்ளையாகும்...

 மஞ்சள்  சிவப்பு உடை கொண்ட உந்தன் மேனி
உடை உடுத்துவதில் உந்தன் பாணி
என் நெஞ்சில் நான் கொண்ட ஆணி
இவையாவும் மகிழ்ச்சி தந்து போகும்.

காற்றில் இருக்கும் எந்தன் கால்கள்
உன்னைக் கண்ட பின்பு தானே
அந்த மகிழ்வைக் கொண்டாடிட தானே !

நீல நிற உடையில் நீ வந்தால்
என் நெஞ்சம் புண்ணாய் போகும்
பார் வண்ணம் யாவும் மாறும்
உந்தன் வண்ணம் கொண்டு
கடல் வானம் நீலம் தானே
உந்தன் வண்ணம் கொண்டதாலே !
அன்பின் நிறமோ எந்தன் மனமே
உன் கண்ணின் அழகே 

வண்ணப்பூக்கள் வெள்ளையாகும் 
நீ ஆசை கொண்ட வெண்மையால் தானே.

No comments:

Post a Comment